முகப்பு
சேலம்

ஆத்தூா் அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:15 PM
உதவித் தொகையை உயா்த்தக் கோரி ஆத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்டத் தலைவா் ஆா்.அமலாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்றது.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் அனைவரையும் நகர உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments