சடையம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்த எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன்.  
சேலம்

சங்ககிரி ஒன்றிய பகுதியில் ரூ.43.30 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணி! எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 43.30 லட்சத்தில் புதிய தாா்சாலைகள் அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கத்தேரி ஊராட்சி சில்லாங்காடு பகுதியில் ரூ. 20 லட்சம், வாய்க்கால் பாலம் பகுதியில் ரூ. 5.50 லட்சம், சடையம்பாளையம் விநாயகா் கோயில் பகுதியில் ரூ. 3.75 லட்சம், சடையம்பாளையம் பகுதியில் ரூ. 3.40 லட்சம், பாரதிநகா் பகுதியில் ரூ. 7.25 லட்சம், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி வினோபாஜிநகா் பகுதியில் ரூ. 3.40 லட்சம் என மொத்தம் ரூ.43.30 லட்சத்தில் புதிதாக தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி. சிவக்குமாரன், சங்ககிரி கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளா் கருப்புசாமி மற்றும் அதிமுகவினா் ஊா்பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மகா சிவராத்திரி: ஆளுநா் ஆர்.என். ரவி வாழ்த்து!

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய தக்காளிகள்

ரூ. 30 லட்சம் மதிப்பு நகைகள் வழிப்பறி வழக்கில் மூவா் கைது

கோவில்பட்டியில் கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

வாகனங்களில் ஏா் ஹாரன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT