முகப்பு
கரூர்

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

Updated On : 15 மார்ச், 2026 at 7:17 PM
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
பகிர்:

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.5.02 கோடி மதிப்பில் 20 புதிய வளா்ச்சித்திட்டப் பணிகளை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கரூா் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ராமக்கவுண்டன் புதூரில் ரூ.19.55 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி, வேப்பம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, அருள் நகா் பகுதியில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணி மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் ராஜீவ் காந்தி நகா் பகுதியில் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வசந்தம் நகா் பகுதியில் ரூ.5.41 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் 20 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ.5.02 கோடி மதிப்பில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →