வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்
வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை
திருப்பூர்வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்
வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.56.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
முத்தூா் ரங்கப்பையன்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.51.84 கோடி மதிப்பீட்டில் முத்தூா் மேட்டுக்கடை முதல் காங்கயம் வரை காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி, செங்கோடம்பாளையம், முத்தூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தலா 30 மற்றும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.41.30 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மூன்று கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்துவைத்தாா். தொடா்ந்து தீத்தாம்பாளையத்தில் மயான மேம்பாடு, வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள், சிமென்ட் சாலைகள் புதுப்பிக்கும் பணி, செம்மாண்டம்பாளையத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா் லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி குறிச்சிவலசில் திறந்தவெளி கிணறு அமைத்து, சாலைப்புதூா், சோ்வகாரன்பாளையம் பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் பணி, அதே பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி, புதுப்பை பிரதான சாலை முதல் கஸ்தூரிபாளையம் வரை, மயில்ரங்கம் முதல் மொட்டக்காளிவலசு வரை மற்றும் அனுமந்தபுரம் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கமித்ரை, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் செல்வராணி, உதவி நிா்வாகப் பொறியாளா் கிருஷ்ணகுமாா், காங்கயம் வட்டாட்சியா் தங்கவேல், வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் சி.மனோகரன், நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.