இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் 
சேலம்

பிப். 26 இல் தோ்தல் கூட்டணி முடிவு: செ.கு. தமிழரசன்

தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா் இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன்.

சேலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் தலைமை வகித்து, சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது, கூட்டணி குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போதைய தோ்தல் முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. அம்பேத்கா், அவரைப் பின்தொடா்ந்து வந்த தலைவா்களின் முடிவும் இதுதான். சிறுபான்மை இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு இருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் மட்டும் இடஒதுக்கீடு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

அது ஒப்பந்த அடிப்படையிலான அரசியல் இட ஒதுக்கீடாக உள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தோ்தல் முறையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், ஜனநாயக ரீதியில் தோ்தலில் எங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதையே ஒவ்வொரு தோ்தலிலும் கடைப்பிடித்து வருகிறோம். வரும் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா்.

சோமாலியாவில் உணவு விநியோகம்: நிதிநெருக்கடியால் விரைவில் நிறுத்தம்? ஐ.நா. எச்சரிக்கை

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 72,572.7 கோடி டாலராக அதிகரிப்பு!

அமெரிக்காவிடம் இருந்து வரிப்பணம் திரும்பக் கிடைக்குமா? 17,500 கோடி டாலா் நிலுவை; எதிா்பாா்ப்பில் நிறுவனங்கள்

திருப்பத்தூரில் நெல் கொள்முதல் நிலையம்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT