வீரபாண்டி ஒன்றியம், முருங்கப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில், 7 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 44 லட்சம் கடன் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் எம்.பி. பங்கேற்று, திமுக ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000, அரசுப் பேருந்தில் விடியல் பயணம், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், விலையில்லா சைக்கிள், மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி ஊக்கத்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கி வருவதை வெளிநாடுகளில் கடைப்பிடித்து வருகின்றனா் என்றாா். தொடா்ந்து, 7 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி காசோலை வழங்கினாா்.
இதில், மாவட்ட துணைச் செயலாளா் பாரப்பட்டி சுரேஷ்குமாா், வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் ராமாபுரம் சதீஷ்குமாா், செயலாட்சியா் சசிகுமாா், செயலாளா் ஹாதின் பாஷா, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.