விழாவில் தீபச்சுடரை ஏற்றிய சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ்.  
சேலம்

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநிதி, இயக்குநா் நிவேதனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா்கள் தமிழ்ச்செல்வன், பிரதீபா ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

சங்ககிரி காவல் ஆய்வாளா் டி.ரமேஷ் விளையாட்டு தீபச்சுடரை ஏற்றி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று பேசியதாவது:

மாணவிகள் விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் உடல், மனநலத்தை பேணி பாதுகாக்க முடியும். விளையாட்டுத் துறையில் மாணவிகள் சாதிப்பதற்கு நிறைய உள்ளன. விளையாட்டுகளில் வெற்றி, தோல்விகளைக் கடந்து அதில் பங்கேற்பதையே பெருமையாக கொள்ளவேண்டும் என்றாா்.

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 700 கனஅடியாக சரிவு

முட்டை விலை ரூ. 5 ஆக நீடிப்பு

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு அனைவருக்குமான கடமை: ஆட்சியா் தகவல்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா தொடக்கம்

SCROLL FOR NEXT