விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.
சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள், பேரவை மன்ற உறுப்பினா்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.
கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள் அவரவா் துறையின் ஆண்டறிக்கையை வாசித்தனா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
முதலிடம் பிடிப்பது மட்டுமே சாதனையல்ல; நல்ல இந்திய குடிமகனாக இருப்பதே மிகச் சிறந்த சாதனையாகும். தினமும் ஒருமணி நேரம் உங்களது கைப்பேசியை அணைத்துவிட்டு உங்களது பெற்றோருடன் உரையாடுங்கள், இன்றைய நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளுங்கள் என்றாா்.
இதில், அனைத்துத் துறை மாணவிகள், பெற்றோா், அனைத்துக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.