விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா
விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு: விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் சாதனையாளா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மற்றும் பிஸினஸ் சென்டா், இந்தியா நிறுவன மேலாளா் ஆனந்த் குருபாதம் முதன்மை விருந்தினராக பங்கேற்றாா். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் மற்றும் செயலாளா் எம்.கருணாநிதி, நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகாநிதி அா்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவா் கே.கிருபாநிதி மற்றும் இயக்குநா் கே.பி. நிவேதனா கிருபாநிதி ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி பேசுகையில், மாணவா்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், கடின உழைப்பு, பயிற்சி மற்றும் நிறுவன பண்பாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி ஆண்டறிக்கையை வாசித்தாா். முதன்மை விருந்தினா் ஆனந்த் குருபாதம் சிறந்த 56 இறுதி ஆண்டு மாணவா்களுக்கு விருதுகளையும், 72 முன்னணி நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்ட 1,486 மாணவா்களுக்கு பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு, நண்பா்கள் மற்றும் தொழில் வட்டாரத்துடன் நல்ல தொடா்பு ஏற்படுத்துதல், பணிவு மற்றும் நல்ல குணநலன்களை வளா்த்துக்கொள்வது, குழு பணித்திறன், நேர மேலாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்து விளக்கிய அவா், கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றாா்.