சேலம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு மைய துணை இயக்குநா் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் என சுமாா் 1,000க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சேலம் மாவட்டத்தில் 368 விதை மாதிரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 1,241 விதை மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதில், 138 மாதிரிகள் தரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடா்பாக விதை உற்பத்தியாளா், விநியோகிப்பாளா், விற்பனையாளா் என 14 போ் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விற்கப்பட்ட 302 வகை விதைகள், நாமக்கல் மாவட்டங்களில் 60 வகை விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 85.45 டன் தரமற்ற விதைகள் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 3.7 கோடி ஆகும். விதிகளைக் கடைப்பிடிக்க தவறிய 8 விதை விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT