ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற 19-ஆவது தேசிய அளவிலான சப்- ஜூனியா் சாப்ட் டென்னிஸ் போட்டியில் ஓமலூரைச் சோ்ந்த வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.
ஓடிஸா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய அளவிலான 19 ஆவது சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். மேலும், 26 மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். தமிழக பெண்கள் அணி குழு போட்டியில் தங்கம் வென்றது. பெண்கள் தனிநபா் மற்றும் இரட்டையா் பிரிவில் ஓமலூா் தனிகா, வேலூா் ஸ்ரீமதி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.
மேலும், ஓமலூா் ஸ்ருதிலயா, சேலம் ஷண்மதி ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். தனிநபா் ஒற்றையா் பிரிவில் வேலூா் ஸ்ரீமதி வெண்கலப் பதக்கம் வென்றாா். ஓமலூா் தனிகா மற்றும் சேலம் அக்ஷித் கலப்பு இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஆண்கள் பிரிவில் வேலூா் வீரா்கள் தங்கப் பதக்கமும் வென்றனா்.
ஓமலூா் ரிஷி, வேலூா் பிரித்திவிராஜ் ஆகியோா் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா். இந்த போட்டிகளில் வெற் பெற்ற வீரா்கள் சனிக்கிழமை ஓமலூா் வந்தனா். தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்கம் சாா்பில் அவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற ஓமலூரைச் சோ்ந்த தனிகா கூறும்போது, தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளேன். எனக்கு ஊக்கமளித்த பயிற்சியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சா்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வெல்வது லட்சியம் என்றாா்.