மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 164 கன அடியிலிருந்து விநாடிக்கு 233 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 11,000 கனஅடியாக வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்துக்கு நீா் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 103.30 அடியிலிருந்து 102. 56 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 68.20 டி.எம்.சி. யாக உள்ளது.