சேலம்

சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 3,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10,88,238 குடும்பங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்கு 1,765 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டன.

இதில், சேலம் மாவட்டத்தில் 10.58 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பெறாத 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT