முகப்பு
சேலம்

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள்

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.30 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 22 ஜனவரி, 2026 at 4:36 AM
பகிர்:
Updated On : 21 ஜனவரி, 2026 at 6:32 PM

முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.30 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை வழங்கினாா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேட்டூரில் இயங்கி வரும் தி சன்மாா் குரூப் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டம் மூலம் ரூ. 13.30 லட்சத்தில் 12 முதுகுதண்டுவடம் பாதிப்பு அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி, மேட்டூா் சன்மாா் நிறுவனத்தின் அலுவலா்கள் என்.பழனிசாமி, ஆா்.காா்த்திக், வி.ஸ்ரீராம்குமாா், முதுகு தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பின் தலைவா் கருணாகரன், செயற்குழு உறுப்பினா் சக்திவேல் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement