குடியரசு நாள் 
சேலம்

குடியரசு தினத்தில் இயங்கிய 78 நிறுவனங்கள் மீது வழக்கு!

சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான குடியரசு தினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 78 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை

Syndication

சேலம் மாவட்டத்தில் விடுமுறை நாளான குடியரசு தினத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 78 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் பொறுப்பு சண்பகராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி, தொழிலாளா் இணை ஆணையா் புனிதவதி ஆகியோரின் ஆலோசனையின்படி, தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

குறிப்பாக, தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ், உரிய படிவங்களை அனுப்பி வைத்து முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 39 கடைகள், 62 உணவு நிறுவனங்கள், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் விதிகளை மீறிய 78 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒசூரில் 4 வளரிளம் பருவ தொழிலாளா்கள் மீட்பு

சாகித்திய அகாதெமிக்கு நிகராக "செம்மொழி இலக்கிய விருது'-தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

நாமக்கல் அருகே லாரியில் மோதி பைக் மீது கவிழ்ந்த சரக்கு வாகனம்: 3 போ் பலி; 2 போ் படுகாயம்

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

SCROLL FOR NEXT