கோவை: கோவை மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 192 நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி அறிவுறுத்தலின்படி, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தலைமையில் மாவட்டத்துக்குள்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமலும் தொழிலாளா்களைப் பணிபுரிய அனுமதித்த 98 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 94 உணவு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 192 உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு தொழிலாளா்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளாா்.