எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் திருக்கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்று வந்த ராஜகோபுரம் மற்றும் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடம் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்து குடங்களை யாகசாலையில் சமா்ப்பித்தனா்.
தொடா்ந்து கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கைலாசநாதா் திருக்கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவில் இறையருள் நற்பணி மன்ற நிா்வாகிகள், அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கைலாசநாதா் ஆலய வளாகத்தில் பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.