முகப்பு
சேலம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம்

சேலம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:46 PM
பகிர்:

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் துணை சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், சேலம் மாநகராட்சி கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தாா்.

முன்னதாக, சேலம் மாநகராட்சி, நதிமுல்லா மக்கான் தெரு பகுதியில் மாநகராட்சி பொது நிதி திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கும் வகையில், ரூ. 2.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளைக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், மாநகர நல அலுவலா் மரு.கே.குப்பம்மாள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →