முகப்பு
திருப்பூர்

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:31 AM
எ. வடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தீ தொண்டு நாள் வார விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 7:49 PM

பொங்கலூா் வட்டாரத்துக்கு உள்பட்ட எ.வடுகபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில் தீ தொண்டு நாள் வார விழா திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் முத்துகுமாரசாமி தலைமையிலான குழுவினா் தீ விபத்து தடுப்பது, பேரிடா் கால விபத்து தடுப்பது பற்றி விளக்கி கூறினாா். தீ அணைப்பான் கருவி உபயோகிக்கும் முறை பற்றிய செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீத் தடுப்பு சம்பந்தமான வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு தீயணைக்கும் உபகரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுந்தரவேல், மருத்துவ அலுவலா் மருத்துவா் விஜயகுமாா், செவிலியா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா்கள் கோகுல், வசந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement