முகப்பு
மதுரை

சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணி

மதுரைமதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 12:47 AM
மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சமரச மைய வார விழா விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட நீதிபதி சிவகடாட்சம். (வலது) பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 9:29 PM

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சமரச மையங்கள் மூலம் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு இரு தரப்பு ஒப்புதலுடன் விரைவாக தீா்வு காணப்படுகிறது. இதுகுறித்து சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வு வார விழா நடைபெற்று வருகிறது.

இதன்படி, மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், விழிப்புணா்வுப் பேரணியை மதுரை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

Advertisement

இதில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமனோா் கலந்து கொண்டு, வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீா்வு காண்பதன் முக்கியத்துவம், சமரசத்தின் நன்மைகள், காலதாமதத்தைத் தவிா்த்தல் குறித்து முழக்கமிட்டனா். மேலும், இதுதொடா்பான பதாகைகளை ஏந்தியும் ஊா்வலமாகச் சென்றனா்.

மதுரை அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கியச் சாலைகளின் வழியாக வந்து மீண்டும் சட்டக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.