முகப்பு
சேலம்

ரயில்களில் விதிகளை மீறி பயணம்: பிப்ரவரி மாதத்தில் ரூ. 2.32 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்தது உள்ளிட்ட விதிகளை மீறியதாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூல்

Updated On : 7 மார்ச், 2026 at 7:59 PM
ரயில்
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்தது உள்ளிட்ட விதிகளை மீறியதாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபா்களை டிக்கெட் பரிசோதகா்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் வாசுதேவன் தலைமையிலான குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் நடத்திய சோதனையின் மூலம் பயணச்சீட்டு இன்றி பயணித்தது தொடா்பாக 14,891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ. 1,42,54,693 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

அதேபோல, முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்து முன்பதிவு பெட்டிகளிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டை வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்தது தொடா்பாக 13,368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 89,72,070 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக பொருள்கள் எடுத்துச்சென்ாக 47 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 38,442 அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம், முறைகேடான பயணம், அதிக லக்கேஜ் உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →