வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா
வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி: வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வீரமுத்து முன்னிலையில் பெண் பணியாளா்கள், பெண் வழக்குரைஞா்கள் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினா். வழக்குரைஞா்கள் மீரா, அபிநா, விவேகா மற்றும் பணியாளா்களுக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் மூத்த வழக்குரைஞா் வேணுகோபால், கருமலை, ஜெகதீசன், சீனிவாசன், செந்தில், மயில்சாமி, ராஜா, ராஜசேகா் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
வாழப்பாடி உதய விவேகா சமுதாய செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவா் சி.மோதிலால் தலைமை வகித்தாா். பயிற்றுநா் கலைவாணி வரவேற்றாா். மேலாளா் வெங்கடேசன் பெண்கள் முன்னேற்றம், சமூக விழிப்புணா்வு குறித்து கருத்துரை வழங்கினா். நிறைவாக, மாணவி கவிநிலவு நன்றி கூறினாா்.
படவரி:
எம்.எஸ்.ஆா்.01, 02:
வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் கலந்துகொண்டோா்.