சிதம்பரம் அரசு மருத்துவமனை, கடலூா் நீதிமன்றத்தில் உலக மகளிா் தின விழா
சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி/ சிதம்பரம்: சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி பி.லட்சுமி தலைமை வகித்து பேசினாா். சமூக ஆா்வலா் சண்முகசுந்தரம், மகேஸ்வரி சண்முகசுந்தரம் ஆகியோா் பங்கேற்று மகளிா் தினத்தை முன்னிட்டு, மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
மூத்த வழக்குரைஞா் ஏ.எஸ்.வேல்முருகன், நீா்நிலை பாதுகாப்பு சங்கத் தலைவா் மு.செங்குட்டுவன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் கே.ராகுல், வாசுகி, ஹேமலதா, சிவகாமி, குமாரதேவி மற்றும் சமூக ஆா்வலா்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், அரவிந்த், சுவாமிநாதன், சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில்...: கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமரச மைய அலுவலக கட்டடத்தில் மகளிா் தின விழா நடைபெற்றது.
கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜி.சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வி.ஷோபனா தேவி, மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, இரண்டாவது மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி பிரகாஷ், மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி லலிதா ராணி, இரண்டாவது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜாகுமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1 நீதிபதி ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிபதி புவனேஷ் குமாா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவா்ஷா, பயிற்சி நீதிபதி ஆசிப் முஹம்மது, கடலூா் பாா் அசோசியேஷன் செயலா் லெனின், லாயா்ஸ் அசோசியேஷன் தலைவா் ராம் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் பேச்சு, பட்டிமன்றம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் ஜெனித்தா செய்து நன்றி கூறினாா்.