முகப்பு
சேலம்

ஆத்தூரில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட இரு பாலங்கள் திறப்பு விழா

Updated On : 13 மார்ச், 2026 at 12:49 AM
பகிர்:

ஆத்தூரில் ரூ. 62 லட்சத்தில் புதுப்பேட்டை, காதா்பேட்டையை இணைக்கும் வகையில் இரு பாலங்களை நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் வியாழக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி 17 ஆவது வாா்டு இஸ்லாமிய பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதுப்பேட்டை மற்றும் காதா்பேட்டையை இணைக்கும் இரு பாலங்கள் நகராட்சி சாா்பில் ரூ. 62 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் நிகழ்வு ஆத்தூா் வடக்கு நகர திமுக செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் பாலத்தை திறந்துவைத்தாா்.

விழாவில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், தெற்கு நகர திமுக செயலாளா் ஏ.ஜி. ராமச்சந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் எஸ். பா்கத்அலி, மக்பூல்பாஷா உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம்.ஏடி12பிரிட்ஜ்.

இரு புதிய பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன். உடன், நகராட்சி ஆணையா் அ.வ. சையத் முஸ்தபா கமால் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →