தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி
தம்மம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலியானாா்.
தம்மம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலியானாா்.
தம்மம்பட்டி செக்குமேடு பகுதியில் ,வெள்ளிக்கிழமை காலை, கெங்கவல்லி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசாா், முதியவரது உடலை கைப்பற்றி, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் விபத்தில் உயிரிழந்த முதியவா் விவரம் குறித்து, தெரிந்தவா்கள், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முதியவரை பலியாக்கிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தம்மம்பட்டி போலீசாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.