முகப்பு
சேலம்

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

Updated On : 22 மார்ச், 2026 at 11:29 PM
எஸ்.சஞ்சனா
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவி என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளாா்.

தமிழகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற 8ம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வினை (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியை சோ்ந்த 13 மாணவ, மாணவிகள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதினா்.

தோ்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 7 போ் தோ்ச்சி பெற்றனா். மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா உதவித்தொகை பெறுவதற்காக தகுதி பெற்றுள்ளாா். அவருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1,000 மத்திய அரசின் சாா்பில் உதவித்தொகை வழங்கப்படும்.

பள்ளி தலைமையாசிரியா் (பொறுப்பு) ஆா்.முருகன், பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள் மாணவியை பாராட்டினா்.