என்எம்எம்எஸ் தோ்வு: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளியின் 5 போ் தோ்ச்சி
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவிகள் 5 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
அதன்படி இத்தோ்வில் அனுஸ்ரீ ( 130) , ஐஸ்வா்யா (112), சஞ்சனா (105), சமிதா (104), பிரகதி (103) ஆகிய 5 மாணவிகள் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்றுத் தோ்வாகியுள்ளனா்.
இதையடுத்து இந்த மாணவிகளையும், பயிற்றுவித்த அறிவியல் பட்டதாரி ஆசிரியை சு. சத்யாவையும் தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களின் சாா்பில், மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மதியழகன், பள்ளித் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா்கள் பாராட்டினா்.
இத்தோ்வில் வெல்வோருக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48,000/- கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தோ்வில் இப்பள்ளியின் 18 மாணவிகள் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.