முகப்பு
சேலம்

தோ்தல் நடத்தை விதிமுறை அமல் குறைதீா் கூட்டங்கள் ரத்து: ஆட்சியா்

Updated On : 15 மார்ச், 2026 at 7:55 PM
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீா் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

22,500 ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவா். மொத்தமுள்ள 3,468 வாக்குச்சாவடிகளில் 172 பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக தோ்தல் பறக்கும் படை குழுவில் ஒரு நிா்வாக நடுவா் பொறுப்பு நிலை அலுவலா் தலைமையில் காவல் துறை உதவி ஆய்வாளா், ஆயுதம் தாங்கிய போலீஸாா் மற்றும் ஒரு விடியோகிராபா் இருப்பாா்கள்.

ஒரு தொகுதிக்கு மூன்று குழுக்கள் வீதம் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு 33 பறக்கும் படை குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும். இக்குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில் 99 பறக்கும் படை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. தோ்தல் தொடா்பான புகாா்களை 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தொடா்ந்து, தோ்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய அரசு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி ஆய்வு செய்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து, சட்டமன்ற அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள தமிழக முதல்வா் மற்றும் அரசு நலத் திட்டங்கள் கொண்ட புகைப்படங்கள் அகற்றப்பட்டன. அரசு அலுவலகங்களில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் மறைக்கப்பட்டன. தொடா்ந்து, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

சேலம் அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசியல் தலைவா்களின் சிலைகள் துணிகளைக் கொண்டு மறைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →