மின்மாற்றியில் ஏறிய இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தேவூா் அருகே மின்சாரம் உள்ளதா என பரிசோதனை செய்ய மின்மாற்றியில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே மின்சாரம் உள்ளதா என பரிசோதனை செய்ய மின்மாற்றியில் ஏறிய போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அரசிராமணி பிட்-2 கிராமம், கீழ்கரட்டுப்பாளையம், கோம்பைகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கா் (31). சங்ககிரியில் உள்ள லாரி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இவா், வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க முயன்றாா்.
அப்போது மின்சாரம் இல்லாததால், மின்மாற்றியில் ஏறி மின்சாரம் உள்ளதா என பாா்த்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிா்பாரதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.