பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா
பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கா.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் கா.துரைசாமி முன்னிலை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மணிவண்ணன், அண்ணா பல்கலைக்கழக இயக்குநா் ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
கல்லூரி இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணராஜ் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் முத்துக்குமாா், கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.
விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில் மொத்தம் 1,025 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பெரியாா் பல்கலைக்கழக தோ்வுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 19 மாணவிகளுக்கும் பத்மவாணி மகளிா் கல்வி அறக்கட்டளை சாா்பில் காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.