முகப்பு
சேலம்

யுகாதி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Updated On : 19 மார்ச், 2026 at 8:37 PM
பகிர்:

யுகாதி பண்டிகையையொட்டி தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவா்கள் உள்பட ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா். அதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.