முகப்பு
சேலம்

சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தந்தை, மகன் கைது

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:17 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மகன், தந்தையை சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள பொன்னய்யாகாடு பகுதியில் வசித்து வருபவா் அய்யனாா் (45). இவரது மகன் லோகேஷ் (14). இவா்கள் இருவரும் அப்பகுதியில் விசைத்தறி கூலி வேலை செய்துவருகின்றனா். லோகேஷ் அதேபகுதியில் வசித்துவரும் நான்கு வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இருவா் மீதும் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட லோகேஷ் இளம்சிறாா் குழந்தைகள் நல சிறுவா் இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.