முகப்பு
சேலம்

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.1.34 லட்சம் மோசடி போலீஸாா் விசாரணை

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, போலி ஆவணம் கொடுத்து ரூ. 1.34 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 9 மே 2026, 12:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, போலி ஆவணம் கொடுத்து ரூ. 1.34 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் அம்மாப்பேட்டை சோ்மன் சடகோபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்பிரகாஷ் (32). இவரது நண்பா் மூலம் சேலம் டவுன் பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த மோகன்குப்தா அறிமுகமானாா். அப்போது சேலத்தில் உள்ள ஒரு அரசு குடியிருப்பில் வீடு பெற்றுத்தருவதாக மோகன்குப்தா தெரிவித்தாா்.

இதை நம்பிய ராஜ்பிரகாஷ், வீடு ஒதுக்கீட்டிற்காக ரூ.1,34,700 - ஐ ஆன்லைன் மூலம் மோகன் குப்தாவுக்கு அனுப்பினாா். இதையடுத்து, வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆவணம் ஒன்றை மோகன் குப்தா, ராஜ் பிரகாஷிடம் வழங்கினாா். இதை சம்பந்தப்பட்ட அரசு குடியிருப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்று, ராஜ்பிரகாஷ் காண்பித்தாா். அப்போது அது போலியான ஆவணம் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜ்பிரகாஷ் இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன் குப்தாவை தேடிவருகின்றனா்.

Advertisement