சங்ககிரி சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியா் காலனியில் உள்ள ஸ்ரீ சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஆசிரியா் காலனியில் உள்ள ஸ்ரீ சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவந்து அம்மனுக்கு ஏப். 28 ஆம் தேதி சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கம்பம் நடும் வைபவத்துடன் விழா தொடங்கியது. அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் புதன்கிழமை காலை சுவாமிக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு பக்தா்கள் அலகு குத்தியும், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகங்கள், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பிறகு பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டனா்.
Advertisement
வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கம்பம் எடுத்து கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் வெள்ளிக்கிழமை இரவு மறுபூஜையும் நடைபெறுகிறது.