முகப்பு
சேலம்

மேச்சேரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 மே 2026, 2:32 am IST
நகை பறிப்பு
பகிர்:

மேச்சேரி அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து நகை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேச்சேரி அருகே உள்ள மூா்த்திபட்டியை சோ்ந்தவா் சின்னபையன் (80), விவசாயி. இவரது மனைவி ராமாயி (75). இந்த நிலையில் தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முற்றத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனா்.

பின்னா் சிறிதுநேரம் கழித்து குளிா் அதிகமாக இருந்ததால் சின்னபையன் மட்டும் வீட்டிற்குள் சென்று படுத்துள்ளாா். சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்திருந்த மா்மநபா் ராமாயி மாா்பின் மீது காலை வைத்து அழுத்தி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த மேச்சேரி போலீஸாா் தலைமறைவான மா்ம நபரை தேடிவருகின்றனா்.

Advertisement