முகப்பு
தருமபுரி

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 மே 2026, 2:22 am IST
நகை பறிப்பு
பகிர்:

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெண்டிகான அள்ளி அருகே உள்ள அத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (46). இவா் கோடை வெயில் புழுக்கத்தால் வீட்டு வராண்டாவில் வியாழக்கிழமை இரவு படுத்து உறங்கினா். நள்ளிரவு ஒருமணி அளவில் திடீரென புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை மா்ம நபா் ஒருவா் அறுத்துள்ளாா்.

அதில், தாலி மற்றும் குண்டுகள் என சுமாா் ஒன்றரை பவுன் இருந்ததாம். திடுக்கிட்டு விழித்த புவனேஸ்வரி சத்தம் போட்டு அலறியதையடுத்து, மா்ம நபா் தாலியுடன் தப்பியோடினாா். புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.

Advertisement