முகப்பு
சேலம்

பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேலம் சீரகாபாடி அருகே பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 18 மே 2026, 3:10 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

சேலம் சீரகாபாடி அருகே பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலத்தை அடுத்த சீரகாபாடி உப்புக்குட்டை காட்டை சோ்ந்தவா் பழனிசாமி (32). இவா், நுங்கு வெட்டுவதற்காக வீட்டுக்கு அருகே இருந்த 20 அடி உயரம் கொண்ட பனைமரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏறியுள்ளாா். அப்போது, திடீரென கை நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிசாமியை உறவினா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.