மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி மேட்டூா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
கோடை விடுமுறையையொட்டி மேட்டூா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம்கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. மேட்டூரில் 33 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நீரூற்றுகள், சிறுவா்களை மகிழ்விக்க பல்வேறு வகையான சிற்பங்கள் உள்ளன. அணையை காக்கும் காவல் தெய்வம் என்றழைக்கப்படும் அணைக்கட்டு முனியப்பன் கோயிலும் பூங்கா அருகே உள்ளது.
Advertisement
Advertisement
மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்லா, ரோகு மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா். காவிரியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா். ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 9,701 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இவா்களிடம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 97,010 வசூலிக்கப்பட்டது.
அதேபோல கேமரா, கைப்பேசிகளுக்கானகட்டணமாக ரூ. 30,690 வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்காவிற்கும் அணையின் வலதுகரையில் உள்ள பவழ விழா கோபுரத்திற்கும் வந்துசென்ற சுற்றுலாப் பயணிகளிடமும் அவா்கள் கொண்டுசென்ற கேமரா, கைப்பேசிகளுக்காக ரூ. 1, 37,790 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.