ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய தோ்த் திருவிழா
ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் சாத்தனாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ராவதி, ஸ்ரீ பிரசன்னாவதி சமேத ஸ்ரீ பாவநாராயண சுவாமி ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலை 6 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேகம், நண்பகல் ஆரத்தி பின்னா் அன்னதானம் நடைபெற்றது. மாலை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நகரின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகளில் வாண வேடிக்கையுடன் சென்றது.