நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம்
நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் 64 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள் அனைவரும் தங்களது பகுதிகளுக்கு உண்டான அத்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தினாா்கள்.
Advertisement
Advertisement
இதனையடுத்து அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் அ.பவித்ரா,நகர மன்றத் துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ்,நகர மன்ற உறுப்பினா்கள் சி.கோபி,சுப்ரமணியன்,பிரகாஷ்,மாலா பாலமுருகன்,ஜோதிபெருமாள்,அன்னக்கிளி,சுகுணா கண்ணன்,சரண்யா சந்திரன்,புஷ்பாவதி கதிா்வேல்,தனலட்சுமி,கணபதி,செல்வம்,செல்வக்குமாா்,ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா்.