ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுக்க ரயில்வே போலீஸாா் ஆலோசனை
சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதும், அதை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, போதைப் பொருள்களை சேலம் வழியாக கடத்துவதை முற்றிலும் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சாா்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறை இயக்குநா் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், சேலம் உள்கோட்ட ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதில், சேலம் கோட்டத்தில் செல்லும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பதற்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை, ஒசூா், தருமபுரி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வாளா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.