முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் போலீஸாா் கொடிஅணிவகுப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:04 AM
வாணியம்பாடியில் டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற போலீஸாா் கொடி அணிவகுப்பு.
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:12 PM

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப் பதிவு செய்யவும், தோ்தலின்போது எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் காவல் ஆய்வாளா்கள் ஆனந்த், அமுதா முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு நடைபெற்றது. 150 போ் கலந்து கொண்டு வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே இருந்து ஊா்வலமாக புறப்பட்டு, சிஎன்ஏ சாலை, பெருமாள் பேட்டை சாலை வழியாகச் சென்று நியூடவுனில் முடிவடைந்தது.