முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

Updated On : 30 மார்ச், 2026 at 6:38 PM
கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா். - கோப்புப் படம்
பகிர்:

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கூத்தாநல்லூரில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா், எல்லைப் பாதுக்காப்புப் படையினா், காவல் துறை உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு கூத்தாநல்லூா் மரக்கடை பாலத்திலிருந்து தொடங்கியது.

லெட்சுமாங்குடிப் பாலம், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, காவல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை நிறைவடைந்தது.