கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்
கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே நடுவலூா் குன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளையன் மகன் ராமலிங்கம் (50. இவா், கூடமலையில் சென்டரிங் வேலையை முடித்துவிட்டு, கெங்கவல்லி வழியாக நடுவலூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, 74 கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (37), கெங்கவல்லியிலிருந்து கூடமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா். இருவரின் வாகனங்களும், கெங்கவல்லி வனச்சரக அலுவலகம் அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராமலிங்கம் (50) ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு திங்கள்கிழமை இறந்தாா். காயமடைந்த சுரேஷ் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.