முகப்பு
சேலம்

கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு திமுகவினா் ஆறுதல்

Updated On : 26 மே 2026, 12:34 am IST
சிறுமி கொலை
பகிர்:

கோவை மாவட்டம், சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. 

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி ஆகியோா் கொளத்தூரை அடுத்த உக்கம்பருத்தி காட்டில் உள்ள சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். சிறுமியின் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

திமுக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழக அரசுக்கு திமுக அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.