கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்
கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல்
கோவையில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாக பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை முதல்வர் விஜய், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
முன்னதாக, சிறுமியின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரண உதவி வழங்க பரிந்துரைப்பதாக சூலூர் எம்எல்ஏ சுகுமார் உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.