திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா
கமுதி, அக். 23: திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா ஏற்பாடு பணிகள், வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றி, பூஜை வழிபாடு நடத்தி துவங்கப்பட்டன. ஆண்டுதோறும் திராவிட விழிப்புணர்ச
கமுதி, அக். 23: திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் விழா ஏற்பாடு பணிகள், வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் ஊன்றி, பூஜை வழிபாடு நடத்தி துவங்கப்பட்டன.
ஆண்டுதோறும் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை விழாவை கழகத் தலைவர், டாக்டர் பி.டி.அரசகுமார் நடத்தி வருகிறார். விழா முன்னிட்டு முளைப்பாரி பவனி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
விழா துவக்கப்பணிகள் துவக்க நிகழ்ச்சியாக, முகூர்த்த கால் ஊன்றி, பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலர் இ.செல்லத் துரை பாண்டியன் தலைமையும், ராமநாதபுரம் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பூமித்தேவர் முன்னிலையும் வகித்தனர். கமுதி ஒன்றிய செயலர் தயாளன் வரவேற்றார்.
Advertisement
பசும்பொன் தேவர் விழா முளைப்பாரி பவனியில் பங்கேற்கும் மகளிர் அணியினருக்கு சீருடை புடவைகளும், விழாவில் அணிவகுத்துச் செல்லும் இளைஞர் அணியினருக்கு சீருடை டவுசர் மற்றும் பனியன்களும், தொண்டர்களுக்கு வேட்டிகளும் வழங்கப்பட்டன.