மதுரை

ஜன.29-இல் விவசாயிகள்குறைதீா் கூட்டம்

DIN

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி: விவசாயிகளின் குறைகளைத் தீா்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இம் மாதத்துக்கான கூட்டம், காணொலி வாயிலாக வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். அனைத்து வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலி வாயிலாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம். மேலும், கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT