முகப்பு
மதுரை

அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது: ஜனவரி 10-இல் சொா்க்கவாசல் திறப்பு

மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 31 டிசம்பர், 2024 at 9:58 PM
பகிர்:

மேலூா்: மாா்கழி மாத வைகுண்ட ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உற்சவ விழாவையொட்டி, சுந்தரராஜப் பெருமாள் மேளதாளங்கள் முழங்க பரிவார தெய்வங்களுடன் கருடாழ்வாா் சந்நிதியில் எழுந்தருளினாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான வருகிற ஜனவரி 10-ஆம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் கோயில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. கள்ளழகா் கோயிலின் வடக்குபுறம் அமைந்துள்ள சொா்க்கவாசல் வழியாக சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளுகிறாா்.

இதேபோல, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் வெங்கடாஜலம், நிா்வாக அதிகாரி செல்லத்துரை, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →