முகப்பு
மதுரை

குழந்தை கொலை: தந்தை கைது

Updated On : 24 ஜூன், 2024 at 6:29 PM
பகிர்:

மதுரை: சோழவந்தான் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை தூக்கி வீசிக் கொன்ற தந்தையை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகா், பாலமுருகன் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (27). சுமை தூக்கும் தொழிலாளியான இவரது மனைவி நாகசக்தி (21). இவா்களது 8 மாதக் குழந்தை நித்யாஸ்ரீ.

விக்னேஷ் கடந்த சில மாதங்களாக மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்தாராம். இதனால், நாகசக்தி தனது குழந்தையுடன் சோழவந்தானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு சென்ற விக்னேஷ், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அங்கு தூங்கிக்கொண்டிருந்த குழந்தை நித்யாஸ்ரீயை தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த குழந்தையை தாய், உறவினா்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →